ஜூன் 27, 2008...10:49

ஹெலன் கெல்லர் பொன்மொழிகள்

மறுமொழிகளுக்குச் செல்க

சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார் ஹெலன் கெல்லர். இதனால் துவண்டுவிடவில்லை அவர். ‘நம்பிக்கை’ எனும் ஒரேயொரு ஆயுதத்தை மட்டும் கொண்டு தடைக்கற்களை வழிக்கற்களாக்கி பின்னாட்களில் சிறந்த எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் உருவெடுத்தார்.

ஹெலன் கெல்லரின் பிறந்த நாளான இன்று அவர் உதிர்த்த சில பொன்மொழிகளின் தமிழாக்கம்.

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

ஹெலன் கெல்லர் பற்றி மேலும் அறிய…
Helen Keller – Wikiquote

5 மறுமொழிகள்

  • சக்திவேல்

    தரமான பொன்மொழிகளை இன்னும் சேர்க்கலாம்.

  • நிச்சயம் அவ்வாறே செய்கிறேன் :)

    இது போன்ற தரமான பொன்மொழிகளை காணும் போது நிச்சயம் இங்கே பதிகிறேன்.

    மறுமொழிக்கு நன்றி சக்திவேல்.

  • ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

    தேவையான பொன்மொழி
    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

  • நிஜமாக வாழ்க்குத்தேவையான பொன்மொழி.
    //ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.//

    நாம் தவறவிடும் நிறைய சந்தர்ப்பங்கள் இதனாலேயே ஏற்படுகின்றது.
    பகிர்ந்த கொண்டமைக்கு நன்றி Srini.


மறுமொழி இடுக