பதிவுகளின் குறிச்சொல்கள் ‘பொன்மொழிகள்’

ஆகஸ்ட் 26, 2008

அன்னை தெரசா பொன்மொழிகள்

நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.
நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.
அமைதியின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை
நம்பிக்கையின் பலன் அன்பு
அன்பின் பலன் சேவை
சேவையின் பலன் அமைதி.
இன்று (26 ஆகஸ்ட்) அன்னை தெரசாவின் பிறந்த நாள்.

ஆகஸ்ட் 3, 2008

‘நட்பு’ பற்றி திருவள்ளுவர்

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (திருக்குறள் 782)
வளர்பிறை சந்திரன் போல வளர்வது பண்பு நிறைந்தவருடன் கொள்ளும் நட்பு. தேய்பிறை சந்திரன் போலத் தேய்வது அறியாமையில் உழல்பவருடன் கொள்ளும் நட்பு.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. (திருக்குறள் 784)
நட்பு என்பது நகுதலுக்காக (சிரித்தல், பொழுது போக்குதல் (enjoyment)) அல்ல. நண்பர் தவறு செய்ய முற்படும் போது அதை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுதலே நட்பாகும்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும். (திருக்குறள் 785)

கூடிப் பழகுதலும், அடிக்கடி [...]

ஜூன் 27, 2008

ஹெலன் கெல்லர் பொன்மொழிகள்

சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார் ஹெலன் கெல்லர். இதனால் துவண்டுவிடவில்லை அவர். ‘நம்பிக்கை’ எனும் ஒரேயொரு ஆயுதத்தை மட்டும் கொண்டு தடைக்கற்களை வழிக்கற்களாக்கி பின்னாட்களில் சிறந்த எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் உருவெடுத்தார்.
ஹெலன் கெல்லரின் பிறந்த நாளான இன்று அவர் உதிர்த்த சில பொன்மொழிகளின் தமிழாக்கம்.
பறக்க விரும்புபவனால் படர முடியாது.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
ஒரு கதவு மூடப்படும் போது [...]